Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
வெள்ளி, 29 நவம்பர் 2024 (07:43 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் மிகவும் மெதுவாக நகர்ந்து வருவதால், அது கரையை கடக்கும் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அந்த வகையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட 15 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.. ராஜ்யசபா எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments