Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
திங்கள், 3 பிப்ரவரி 2025 (15:15 IST)
தமிழ்நாட்டில் பருவமழை காலம் முடிந்த நிலையில், தற்போது பனிக்காலம் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் சில வாரங்களில் கோடைக்காலம் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனிமேல் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும், அதாவது ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேளையில் மட்டும் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 5 முதல் 9ஆம் தேதி வரை வறண்ட வானிலை தான் நிலவும் என்றும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வேளையில் சென்னை உள்பட பல பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்பட்டது. நாளையும் மேகமூட்டத்துடன் கூடிய பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில வாரங்களில் கோடைக்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், பொதுமக்கள் அதற்கு தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments