Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பகலிலும் மழை வெளுத்து வாங்கும் - வெதர்மேன் தகவல்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (12:50 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடலோர மாவட்டங்களில் இன்று பகலிலும் நல்ல மழை பெய்யும் என வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
கடலோர டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. மேகங்கள் மெதுவாக உள்நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால், லேசாக தொடங்கும் மழை ஒரு சில இடங்களில் கனமழையாக பொழியும்.  


 

 
புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சென்னையில் பிற பகுதிகளில் இன்று மிதமான மழை இருக்கும். மேகங்கள் நிறைய அடுக்காக இருப்பதை பார்க்கும் போது, நேற்று போல் இல்லாமல் இன்று பகலிலும் கனமழை பெய்யும். முக்கியமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments