Publish Date: Sun, 04 Nov 2018 (18:43 IST)
Updated Date: Sun, 04 Nov 2018 (18:46 IST)
விருதுநகரில் நடைபெற்ற கட்சி இல்ல விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் களத்தில் நிற்பது அதிமுகவும்,திமுகவும்தான்.நாங்களும் லேட்டா வந்தாலும் கரெக்டா அடிச்சிறுவோம். 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகவுள்ளது.
மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டி முதல்வர் பழனிசாமி தலைலையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ’இவ்வாறு அவர் கூறினார்.