Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கமாட்டோம் - விஜயபிரபாகரன் அதிரடி!

நாங்கள் யாருடனும்  கூட்டணி வைக்கமாட்டோம் - விஜயபிரபாகரன் அதிரடி!
, செவ்வாய், 9 மார்ச் 2021 (15:23 IST)
மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைக்க மாட்டோம் -  விஜயபிரபாகரன் பேட்டி
 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
 
இந்நிலையில்  தங்களது கூட்டணிக்கு வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விஜயகாந்த், பிரேமலதாவை சந்திக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தகவல் கூறியதற்கு பதில் அளித்துள்ள விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், அரசியலில் நாங்கள் தான் சீனியர் அதனால் தெய்வத்துடன் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி. எனவே நாங்கள் தனித்தே 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க தொகுதி ஒப்பந்தம் முடிவு!