Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணையை தெர்மகோல் போட்டு மூடி இருக்கோம்! – செல்லூராரை பங்கமாக கலாய்த்த துரைமுருகன்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (11:27 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் செல்லூர் ராஜூ – அமைச்சர் துரைமுருகன் இடையேயான பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.



தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செய்ய வேண்டியவை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, மதுரை மக்களுக்கு தூய்மையான குடிநீர் பல இடங்களில் கிடைப்பதில்லை என்றும், நல்ல குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “மதுரையில் சுத்தமான குடிநீர் கொடுப்போம். நீர் காலியாகமல் இருக்க அணையை தெர்மகோல் போட்டு மூடியுள்ளோம்” என்று கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்துள்ளது.

முன்னதாக செல்லூர் ராஜூ அமைச்சராக இருந்தபோது அணைகள் வறண்டு போவதை தடுக்க தெர்மகோல்களை அதில் மிதக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments