Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு இடையேயான பிரச்சனையை முடித்துக்கொண்டோம்- சூர்யசிவா, டெய்சி பேட்டி

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (20:07 IST)
தங்களுக்கு இடையேயான பிரச்சனையை பரஸ்பரம் பேசி தீர்த்துக் கொண்டதாக  திருச்சி சூர்ய சிவாவும், டெய்சியும் தெரிவித்துள்ளனர்.

பாஜகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, சமீபத்தில்,  பாஜக நிர்வாகி டெய்சிக்கும்,  திருச்சி எம்பி சிவாவின்( திமுக) மகன் சூர்யா சிவாவுக்கும் அவருக்கும் இடையே போனில் வாக்கு வாதம் எழுந்த  நிலையில்,

பாஜகவின் பெண் நிர்வாகியை சூர்யா சிவா மிரட்டியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்தார்.

அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  இந்த விவகாரம் தொடர்பாக இன்று டெய்சியும், சூர்ய சிவாவும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர்.

அதில், சூர்ய சிவா எனக்குத் தம்பி மாதிரி, எங்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசித் தீர்த்து கொண்டோம். இதனை பெரிது படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் திருச்சி சிவா, அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இதைப் பரப்பி வருகின்றனர். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்  என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments