Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை: எய்ம்ஸ் மருத்துவர்கள்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:33 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ஆகியோர் சிகிச்சை செய்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் நீதியரசர் ஆறுமுகச்சாமி அவர்கள் தலைமையிலான விசாரணை கமிஷன் முன் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூவர் ஆஜராகினர்.
 
இந்த விசாரணை முடிந்தபின்னர் எய்ம்ஸ் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை, சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம் என்றோம் என்றும், ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் என்றும் கூறினர்.
 
எனவே ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினத்தில் அவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்ததாக கூறப்பட்டதற்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் இந்த கருத்துக்கும் பெரும் முரண்பாடு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments