Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் போட்டி நடத்தக் கூடாதுன்னு நாங்கள் கூறவில்லை - ஸ்டாலின்

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (07:23 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என நாங்கள் கூறவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என வேல்முருகன், தமிமுன் அன்சாரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
 
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய நிருபர்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளால் காவிரிக்கான போராட்டங்கள் திசை திருப்பப்படுவதாக கூறப்படுகிறதே? என்று ஸ்டாலினிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர், எங்களைப் பொறுத்தவரையில் ஐ.பி.எல் போட்டி  நடத்தக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. போட்டிகளை ஏற்பாடு செய்திருப்பவர்கள், மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும் என்று தான் சொல்கிறோம் என ஸ்டாலின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments