Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி இருக்கும் வரை எங்களுக்கு பயமில்லை - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (09:55 IST)
பிரதர் மோடி இருக்கும் வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களை யாரும் மிரட்ட முடியாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே நடைபெற்ற ஒரு விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் “அதிமுகவிற்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை மோடி பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் வரை அதிமுக கட்சியும், சின்னமும் நம்மிடமே இருக்கும். அதனால், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. யாருக்கும் பயப்பட தேவையில்லை.
 
திமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் 40 பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்கள்” என அவர் பேசினார்.
 
அதிமுகவை பாஜகவே இயக்குகிறது என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், அதை ஒத்துக்கொள்ளும் விதமாகவும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது போலவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments