Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி இருக்கும் வரை எங்களுக்கு பயமில்லை - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (09:55 IST)
பிரதர் மோடி இருக்கும் வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களை யாரும் மிரட்ட முடியாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே நடைபெற்ற ஒரு விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் “அதிமுகவிற்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை மோடி பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் வரை அதிமுக கட்சியும், சின்னமும் நம்மிடமே இருக்கும். அதனால், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. யாருக்கும் பயப்பட தேவையில்லை.
 
திமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் 40 பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்கள்” என அவர் பேசினார்.
 
அதிமுகவை பாஜகவே இயக்குகிறது என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், அதை ஒத்துக்கொள்ளும் விதமாகவும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது போலவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments