Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிபோன நித்தி: சரண்டர் ஆகலன்னா நீ காலி; நீதிமன்றம் கிடுக்குப்பிடி

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:41 IST)
பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணையில் ஆஜராகாத நித்யானந்தா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா, பெண் பக்தர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்து ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
பாலியல் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாகவும், நேபாளம் வரை சாலை மார்க்கமாகவும் அதன்பின் பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள, 'கெய்மன்' தீவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வந்தார் நித்யானந்தா.
 
இந்நிலையில் இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 3ல் நித்யானந்தா ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்