Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றும் கள்ளக்கடல் நிகழ்வு.. கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

Siva
திங்கள், 6 மே 2024 (09:07 IST)
கடலில் ஏற்படும் கள்ளக்கடல் நிகழ்வு என்று கூறப்படும் கடல் சீற்றம் இன்றும் நீடிக்கும் என்பதால் தமிழக கடற்கரையோர பகுதிகளில் ராட்சச அலைகள் எழும் என்றும், இன்றும் கள்ளக்கடல் நிகழ்வு நடைபெற வாய்ப்பு இருப்பதால் கடற்கரை ஓரங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 
காற்று மாறுபாட்டால் நேற்று இரவு வரை கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றம் இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அது இன்று வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை வரை கடல் சீற்றம் இருக்கும் என்பதால் கடலோர பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
கள்ளக்கடல்  நிகழ்வு என்று சொல்லப்படும் ராட்சச அலைகளால் கடலில் சீற்றம் இருக்கும் என்றும் இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக திருச்செந்தூரில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டவில்லை என்றும் அதனால் பக்தர்கள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments