Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Mahendran
வெள்ளி, 24 மே 2024 (13:32 IST)
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றிய நிலையில் அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக இது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் அதாவது சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments