மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்: தமிழக அரசு

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (12:55 IST)
மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது என்பதால் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேசன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் ஏராளமான பொதுமக்கள் ரேசன் அட்டைக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 கடந்த ஒரு ஆண்டாக ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்காததற்கு அவர்கள் மகளிர் உரிமைக்காக கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான் காரணமா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments