Publish Date: Thu, 26 Aug 2021 (16:41 IST)
Updated Date: Thu, 26 Aug 2021 (16:44 IST)
தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 29,30 ஆம் தேதிகளில் அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைகு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.