Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (09:42 IST)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இன்று காலை 9 மணி நிலவரப்படி இரு தொகுதிகளிலும் 18% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் சுமார் 70% வாக்குப்பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று காலை முதல் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் வருகை தந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் நிற்கின்றனர்.
 
குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments