Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
, திங்கள், 21 அக்டோபர் 2019 (09:42 IST)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இன்று காலை 9 மணி நிலவரப்படி இரு தொகுதிகளிலும் 18% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் சுமார் 70% வாக்குப்பதிவுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று காலை முதல் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் குடைபிடித்த படியே வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர்கள் வருகை தந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் நிற்கின்றனர்.
 
குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர்களை ஊக்கப்படுத்த ராட்சத பலூன்: அசத்தும் தேர்தல் ஆணையம்