போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும்: விஷால்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (07:26 IST)
திமுக தலைவர் கருணாநிதி மூன்றாவது நாளாக இன்றும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறி வருகின்றன.
 
இந்த நிலையில் கருணாநிதி குறித்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளருமான விஷால் தனது டுவிட்டரில் கூறியதாவது: 
 
இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியையே சாரும். இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நாள்வரை அந்த வார்த்தையை சொல்கிறார். ஒருபோதும் அவர் நம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து வருகிறார். என்ன உத்வேகமான மனிதர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.
 
நடிகர் சங்கத்தின் சார்ப்பிலும், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பிலும் ஏற்கனவே கருணாநிதியின் உடல்நிலையை காவேரி மருத்துவமனை சென்று விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments