Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதற்றத்தை ஏற்படுத்திய மருத்துவ அறிக்கையும் முதல்வர் வருகையும்!

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (06:42 IST)
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று இரவு முதல் தற்போது சில நிகழ்வுகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
 
காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதி உடல்நிலை குறித்து வெளியிடப்படும் மருத்துவ அறிக்கை தாமதமாகவே வெளியானது. கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் வரிசையாக வருகை தந்தனர். அதிலும் கருணாநிதி உடல்நிலை சற்று நலிவு அடைந்ததாகவும் பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் மூலம் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
 
அதைத்தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். காவல்துறையினர் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உள்ள அவரது விழாக்களை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக சென்னை திரும்பினார். 
 
இந்த அனைத்து நிகழ்வுகளும் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பதற்றம் நேற்று இரவு முதல் தொடங்கி தற்போது வரை தொடருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments