விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு! என்ன நடக்குது தேர்தல் கமிஷன்?

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (08:30 IST)
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்தே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கதிகலங்கியது. எப்படியாவது விஷாலை போட்டியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்பதில் இருகட்சிகளும் ஒன்றிணைந்தது.

விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இரு கட்சிகளின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.

இந்த நிலையில் முதலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்ததாக கூறிய தேர்தல் அதிகாரி பின்னர் அவரது வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தார். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் நேற்றிரவு விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஷால் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து விஷால் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் முறையிட முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments