Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தேர்தலில் திடீர் திருப்பம்: விஷால் வேட்புமனு தாக்கல் ஏற்பு!!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (20:35 IST)
நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
 
இதற்காக தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இருப்புனும், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். 
 
இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். 
 
இதன் பின்னர் தன்னை முன்மொழிந்த இருவரை மிறட்டிதான் இந்த செயல் நடைபெற்றிருப்பதாக விஷால் ஆடியோ ஒன்றை சற்றுமுன்பு வெளியிட்டார். இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 
 
அந்த ஆடியோவில் அதிமுக-வை சேர்ந்த மதுசூதனன் ஆதரவாளர்கள்தான் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது விஷால் அளித்த ஆதரங்களின் அடிப்படையில் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்க்கப்பட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments