Publish Date: Mon, 20 Jan 2020 (14:15 IST)
Updated Date: Mon, 20 Jan 2020 (14:19 IST)
விஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்
அந்தவகையில் தற்போது தனது தேவி அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவ,மாணவியர்கள் படிப்பு குறித்த சந்திப்பு நடைபெற்ற நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய தேவி அறக்கட்டளை நிறுவனரான நடிகர் விஷால்.....
நீங்கள் என்னை உயர்த்துகிறீகள். அதன் ஒரு சிறிய முயற்சி தான் இந்த தேவி அறக்கட்டளை உதவிகள். நீங்கள் படித்து நல்ல நிலமையில் வாருங்கள். நீங்களும் மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள் என கூறி மாணவர்களை ஊக்குவித்தார். மேலும் மாணவர் சிலர் "எங்களை காப்பாற்றி கல்வி கொடுத்த உங்களை நங்கள் நிச்சயம் பெருமை படுத்துவோம்" என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.