Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் விஷால் சந்திப்பு!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (06:54 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 'இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பட்டிருந்த தடையை நேற்று நீதிமன்றம் நீக்கிவிட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுவது உறுதியாகிவிட்டது.
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முக்கிய பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அளித்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக துணைமுதல்வரும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், மனோஜ்குமார் ஆஅகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments