Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ 1 கோடி வரி செலுத்தாத விஷால் நீதிமன்றத்தில் 2வது முறையாக ஆஜர்!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:57 IST)
நடிகர் விஷால் 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாததால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சேவை வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு சம்மன் அனுப்பினர். இதனால்  இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 
 
இதுதொடர்பாக நடிகர் விஷால் இதுவரை சேவை வரித்துறையில் ஆஜராகவில்லை என கடந்த 17ம் தேதி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறையினர் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். 
 
தற்போது இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. பிறகு இதுதொடர்பாக நடிகர் விஷால் ஏற்கனவே நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்த நிலையில். இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் இன்று நடிகர் விஷால் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments