Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (08:25 IST)
விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி
விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள மூன்று கலசங்களை மர்ம நபர்கள் திருடி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றது என்பதும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வழிபட வருவார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கோபுர கலசங்கள் திருட்டு போயுள்ளது.
 
1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 3 கலசங்களும் 3 அடி உயரம் உடையவை என செய்திகள் வெளியாகியுள்ளன. விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் நள்ளிரவில் திருடப்பட்டுள்ள துகுறித்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments