தொடர் மழை எதிரொலி: இந்த ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:11 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த மாவட்டத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் 
 
இதனையடுத்து இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதையடுத்து வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments