Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு: நீதிபதி அதிரடி உத்தரவு..!

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (13:25 IST)
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை விநியோகித்ததாக விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றனர் என்பதும் மூவருக்கும் சரியான போட்டி இந்த தொகுதியில் இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments