Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடலைன்னாலும் பள்ளி மூடல்! – ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியை மூட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய உத்தரவை விருதுநகர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதன்படி விருதுநகருக்குட்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தாலும் அந்த பள்ளியை மொத்தமாக மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி நாயகா..! பூமி திரும்பிய சுபன்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! கேக் வெட்டி கொண்டாட்டம்!

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments