கடந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமைச்சர் ப.மோகன். அவர் மீண்டும் அதே சங்கராபுரம் தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வாக்க சேகரிக்க சென்ற அமைச்சர் ப. மோகனை அந்த தொகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிலர் செருப்பு, விளக்கமாத்தால் அடிப்போம் என கூறி விரட்டியுள்ளனர்.
சங்கராபுரம் தொகுதியின் அமைப்பு செயலாளராக இருக்கும் மோகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் கொசப்பாடி அரசம்பட்டு என்ற கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார்.
ஊரின் எல்லையிலேயே கிராம மக்கள் திரண்டு அமைச்சரின் காரை வழிமறித்து ஊருக்குள் அமைச்சர் மோகன் வரக் கூடாது எனவும், மீறி வந்தால் அவரை செருப்பு, விளக்கமாத்தால் அடிப்போம் எனவும் கூறி அவரை மிரட்டினர்.
கிராம மக்கள் ஆவேசமாக திரண்டி வந்து தனக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் மோகன் ஊருக்குள் நுழையாமல் விரக்தியுடன் திரும்பிச் சென்றார்.