Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரத்தி சென்று கடித்து குதறும் வெறிநாய்: பீதியில் மக்கள்!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (09:33 IST)
கோப்புப்படம்
சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் வெறிநாய் ஒன்று பல பேரை கடித்து குதறிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்து உள்ள திருவொற்றியூரில் வெறிநாய் ஒன்றின் நடமாட்டம் மற்றும் தாக்குதலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முன்தினம் கல்லூரி மாணவி ஒருவரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. அதை தொடர்ந்து அந்த நாளில் மட்டுமே 8 பேரை அந்த நாய் கடித்து தாக்கியதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் மக்கள் பீதியில் இருந்த நிலையில் நேற்று 9 வயது சிறுவன் பிரசாத் என்பவரை அந்த நாய் கடித்து காயப்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒன்ரறை வயது குழந்தை அஜித்தையும் அது தாக்கியுள்ளது. இதனால் நேற்று பொதுமக்கள் அந்த நாயை பிடிக்கும்படி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி சுகாதார குழுவினர் கிராமப்புறத்தில் சுற்றித்திரிந்த நாயை வலைவீசி பிடித்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் அந்த வெறிநாய் தாக்குதலால் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments