Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! பாமக சார்பில் சி.அன்புமணி போட்டி..!!

Senthil Velan
சனி, 15 ஜூன் 2024 (12:07 IST)
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 
இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று நேற்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.

ALSO READ: பிரதமர் காலில் நிதிஷ்குமார் விழுந்தது பீகார் மக்களுக்கு அவமானம்.! பிரசாந்த் கிஷோர் விமர்சனம்..!!

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ.ஐ. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது..! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!!

விழுப்புரம் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை!

இன்று திமுக முப்பெரும் விழா..! கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!

திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.. கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments