Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

Mahendran
வெள்ளி, 28 ஜூன் 2024 (10:12 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்பதால் திமுக வெற்றி பெற்றால் இரண்டாவது இடம் யாருக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
பாஜக கூட்டணியில் பாமக களத்தில் இருந்தாலும், பாமக விட அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று சீமான் இருப்பதாக தெரிகிறது.  இதை எடுத்துதான் சமீபத்தில் கள்ளச்சாராயம் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நடத்திய போராட்டத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அதற்கு எடப்பாடி சார்பாக நன்றி தெரிவித்ததையும் பார்க்கும்போது அதிமுகவின் ஓட்டுகளை மறைமுகமாக தனது கட்சிக்கு கொண்டு வர சீமான் பிளான் போடுவதாக தெரிகிறது. 
 
அதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள், அப்படி என்றால் அவர்கள் தனக்கு வாக்களித்தால் தான் மிக எளிதில் இரண்டாவது இடத்தை பிடித்த விட முடியும் என்று சீமான் ப்ளான் போடுவதாகவும் அதோடு தேமுதிக வாக்குகளும் கிடைத்தால் இரண்டாவது இடம் உறுதி என்றும் சீமான் எண்ணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ஜெய்ப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது இடம் பாமகவா? அல்லது நாம் தமிழர் கட்சிக்கா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments