Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் விஜயகாந்த் – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி !

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (08:20 IST)
விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபடாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது விக்கிரவாண்டி வேட்பாளருக்கு ஆதரவாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவாரா என்பது சந்தேகமே. ஆனாலும் விஜயகாந்த் முகத்தைப் பார்ப்பதில் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments