விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் விஜயகாந்த் – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி !

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (08:20 IST)
விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர இருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகியத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அரசியல் பணிகளில் அதிகமாக ஈடுபடாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது விக்கிரவாண்டி வேட்பாளருக்கு ஆதரவாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவாரா என்பது சந்தேகமே. ஆனாலும் விஜயகாந்த் முகத்தைப் பார்ப்பதில் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானின் புதிய உச்ச தலைவராக காமேனி மகன் தேர்வு.. டிரம்புக்கு சவாலாக இருப்பாரா?

தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு.. எம்பி ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?

மறுபடியும் ரூ.10,000 வழங்கும் தமிழக அரசு.. ரூ.2500 சம்பளமும் உயர்வு.. யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இங்கிலாந்தை அடுத்து அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுத்த ஸ்பெயின்.. டிரம்ப் கொந்தளிப்பு..

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments