Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா: சென்னை மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (06:50 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
விஜயகாந்தின் உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் ஊடகங்களில் வெளியானதையடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments