Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் சைகைதான்; விஜயகாந்தை பார்த்து நொந்துபோன கட்சியினர்

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (16:48 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளின் தலைமை வேட்ளார்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருப்பவர்களிடம் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று நேர்காணல் நடந்தது. 
 
4 தொகுதிகளுக்கு மொத்தம் 400 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நேர்காணலில் விஜயகாந்த் பலரிடம் பேச முயற்சி செய்தாராம். ஆனால், அவரால் பேச முடியவில்லையாம். 
 
வாய் திறந்து எதுவும் பேசாமல் சைகை மூலம் மட்டும் பேசுகிறாராம். இதனை கண்ட கட்சியினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அமெரிக்காவில் சிகிச்சை பின்னர் பழைய விஜயகாந்தாக அவ்ர் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொண்டர்களுக்கும் கட்சியினருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் வெளியானது Google Pixel 10! - சிறப்பம்சங்கள் விலை நிலவரம்!

ஹோம்வொர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்.. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்ட மாணவன்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments