Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டு வண்டியில் விஜயகாந்த் பயணம் ஏன்? பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2017 (15:30 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளார்.


 


ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உடுமலைப்பேட்டை பகுதி மக்கள், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆனைமலை நல்லாறு அணைக்கட்டும் திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அந்த பகுதியில் போராட்டம் நடத்த சென்றுள்ளார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் மாட்டு வண்டியில் பயணம் செய்கிறார். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேமுதிக தொண்டர்கள் சூழ மாட்டுவண்டியில் அவர் பயணம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போராட்டத்தில் விஜயகாந்துடன் உடுமலைப்பேட்டை தேமுதிக மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments