Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயகாந்த்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (11:24 IST)
சென்னை சைதாப்பேட்டை தேவாயலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கிறிதுமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிராத்தனை செய்தார். 
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறியதால் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த விஜயகாந்த், இன்று கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை தேவாயலத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் தேவாலய வளாகத்தில் தேமுதிக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த், அனைவருக்கும் கேக் வழங்கி கிறிஸ்துமஸ்சை கொண்டாடினார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் ஆர்.கே.நகரில் அதிமுக வின் தோல்விக்கு திமுக தான் காரணம் எனக் கூறுவது வழக்கமான புலம்பல் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments