Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டு வருவார் !சிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:42 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாக பேச முடியாமல் தொண்டை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் கட்சி பொதுக்கூட்டங்களில் அவரது மனைவியும் கட்சி பொருளாரருமான பிரேமலதா விஜயகாந்த் பேசிவந்தார்.

இந்நிலையில் இன்று விருகம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது மகன் விஜய பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடினார்.  உடன் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
அப்போது விஜய பிரபாகரன் கூறியதாவது:
 
’அப்பா (விஜயகாந்த் ) முதல்வராக வேண்டும் எங்கள் விருப்பம் அதுதான்.அதற்காக நான் என் பங்களிப்பை தருகிறேன்.வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அப்பாவின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறோம். 
 
அதன் பின் அப்பா பழைய படி சிங்கத்துக்கு நிகரானவராக இருப்பார். தேர்தல் பிரசாரத்திலும் பங்கு கொள்வார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 29 தொகுதியிலும் ஜெயிப்போம் ’இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments