Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல தான் ஒன்னும் இல்ல, உள்ளயும் ஒன்னுமில்லையா; ஜெயகுமாரை கலாய்த்த தினகரன்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:26 IST)
அமமுகவை சீண்டிய அமைச்சர் ஜெயகுமாரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கிண்டலடித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அமமுக-வை சீண்டுவது உயர் அழுத்த மின்சாரத்தை சீண்டுவது போன்றது எனக் கூறியிருந்தார். இவரது கருத்திற்கு எதிர் கர்த்து பதிவிட்ட ஜெயக்குமார் ‘ அதிமுக சீராக இயங்கும் 230 வோல்ட், டிடிவி யாருக்கும் பயன்படாத ஹை வோல்ட். மேலும் தினகரன் தானே அவர் பயங்கரமானவர் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார் என கூறினார்.
 
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மின்சாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஜெயகுமார் என்னைப் பயங்கரமானவர் என கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயகுமாருக்கு மண்டைக்கு மேல் ஒன்றும் இல்லாததைப் போல மண்டைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை போலும். அதனால் தான் இப்படி பினாத்திக் கொண்டிருக்கிறார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments