Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக விருப்ப மனு.. தேர்தலில் களமிறங்கும் கேப்டன் குடும்பம்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்ப மனு பெற்று வரும் வகையில் விஜயகாந்த் குடும்பத்தினர் பெயரும் விருப்ப மனுவில் இடம்பெற்றுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை தேமுதிக தொடங்கியிருந்தாலும் இன்னமும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை.

முன்னதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘தேமுதிகவிற்கு சட்டமன்ற தேர்தலை தனித்து எதிர்கொள்ள வலு இருப்பதாக பேசி இருந்தார். இந்நிலையில் இன்று முதல் தேமுதிகவின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேபோல விருதாசலத்தில் பிரேமலதா விஜயகாந்தும், அம்பத்தூரில் விஜய பிரபகாரனும் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments