Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் சவால்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (06:20 IST)
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.
 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர்  தொகுதியான ஆர்.கே.நகர் மற்றும் பல பகுதிகளில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்பட்டது.
 
இந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். உடனே அனைத்து இடங்களிலும் காவல் கண்காணிப்பு மூலம் இது போன்ற சட்டவிரோத செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
 
ஏற்கனவே, மதுக்கடைகள் மூலம் சீரழிந்துள்ள நிலையில் இது போன்ற போதை சாக்லேட்களை அனுமதிக்க முடியாது.
 
ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் 500 மதுக்கடைகள் மூடப்படும் என கையெழுத்திட்டார். ஆனால், எந்தெந்த பகுதிகளில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது விரிவாக பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே, இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என சவால் விடுத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments