Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் காணாமல் போவார்கள்? முதல்வர் பழனிச்சாமிக்கு விஜய்காந்த் பதிலடி!

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (10:32 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது கட்சியினர்களிடம் பேசியபோது தற்போது பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்கு கனவு காணுவதாகவும், நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள் என்றும் கமல், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு கமல், ரஜினி ஆகிய இருவரும் பதிலளிக்காத நிலையில் விஜயகாந்த் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, 'கூடிய விரைவில் தேர்தல் வரும் போது யார் காணாமல் போவார்கள் என்று பார்க்கலாம். தேமுதிக கட்சிகாரர்களா அல்லது அதிமுக கட்சிகாரர்களா என அப்போது பார்ப்போம்' என்று பதிலடி கொடுத்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விஜயகாந்த் கூறியதாவது: அவருக்கு பணி அழுத்தமாக இருக்கலாம். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம். ஆனால் பணி அழுத்தத்திற்கு தற்கொலை தீர்வல்ல என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments