Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் கழட்டி விட்டார்...அமைச்சர் ஏன் கழட்டி விடவில்லை?- வீடியோ பாருங்கள்

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (15:51 IST)
கரூர் அருகே தமிழக ஆளுனர் குத்துவிளக்கேற்றும் போது அமைச்சர் விஜயபாஸ்கர் காலணியை கலட்டாத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதோடு, வளர்ச்சிதிட்ட பணிகளை கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
அந்த வகையில்  கரூருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை)  வருகை தந்த ஆளுனர் பன்வாரிலால் புரோகித்., கரூர் அருகே உள்ள கடவூரில் உள்ள சேவாப்பூர் இன்ப சேவா சங்கம் என்கிற தன்னார்வ தொண்டுநிறுவன அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
முன்னதாக நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய கவர்னர் அவரது காலணியை கலட்டி விட்டு, குத்துவிளக்கேற்றினார். ஆனால் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் காலணியை கழட்டி விடவில்லை.
 
இந்த சம்பவம் பா.ஜ.க வினர் மத்தியில் வைரலாகி வருவதோடு, அனைவரையும் சங்கடநிலைக்கு தள்ளப்பட்டதோடு, ஒரு இறைநம்பிக்கையின் மூலமாக தொடக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றுவதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு, ஒரு மாநில கவர்னர் அதுவும் வடமாநிலத்தவர் பன்வாரிவால் புரோகித் காலணியை கலட்டி விட்டு, மரியாதை செலுத்திய போது, ஒரு தமிழகத்தில் பிறந்து ஆன்மீகத்தில் வலம் வரும் அ.தி.மு.க கட்சியை சார்ந்த ஒரு அமைச்சர் அதுவும் ஆளுகின்ற கட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காலணியை கலட்டாத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
-சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments