Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எனது கொம்பன் காளைகள் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”.. விஜயபாஸ்கர் பெருமிதம்

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:04 IST)
”அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எனது 3 கொம்பன் காளைகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் இன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள் சீறி வரும் காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளை எந்த வீரராலும் பிடிக்கமுடியவில்லை. இது குறித்து அவர், “ஜல்லிக்கட்டின் வீரரும் பெருமையும் தொடர்ந்து நிலைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒன்று. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எனது கொம்பன் காளைகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.

இதே போல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையையும் எந்த வீரராலும் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments