Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எனது கொம்பன் காளைகள் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது”.. விஜயபாஸ்கர் பெருமிதம்

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:04 IST)
”அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எனது 3 கொம்பன் காளைகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்திலும், பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் இன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள் சீறி வரும் காளைகளை அடக்கி பரிசுகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளை எந்த வீரராலும் பிடிக்கமுடியவில்லை. இது குறித்து அவர், “ஜல்லிக்கட்டின் வீரரும் பெருமையும் தொடர்ந்து நிலைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒன்று. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எனது கொம்பன் காளைகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என கூறியுள்ளார்.

இதே போல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையையும் எந்த வீரராலும் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments