Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் விஜய பிரபாகரன்.. மறு வாக்கு எண்ணிக்கையா?

Siva
புதன், 12 ஜூன் 2024 (11:50 IST)
விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மதியம் 3.30 மணியளவில் மனு அளிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி, ஏற்கனவே தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 385256 வாக்குகளும், விஜய பிரபாகரன் 380877 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில் 4379 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments