Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி: சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம்

Siva
ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (07:00 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விளவங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி திடீரென நேற்று டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அவர் பாஜகவில் இணைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் கட்சி தாவல் சட்டத்தின்படி விஜய்தரணியின் எம்எல்ஏ பதவியை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தனர். அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவியில் இருந்தும் விஜய் தரணி நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சியின் அனைத்து விதமான பதவிகளில் இருந்து விலகுவதாக விஜய்தரணி அறிவித்த நிலையில் தற்போது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments