Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் விஜயபாஸ்கர், சரத்குமார்..

சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் விஜயபாஸ்கர், சரத்குமார்..
, திங்கள், 10 ஏப்ரல் 2017 (12:23 IST)
சென்னை வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் ஆகியோர் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.


 

 
நடைபெற இருந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ஏராளமான பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு பல புகார்கள் வந்தன. அதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
 
அப்போது விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. மேலும், அவரது உறவினர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது.  அதேபோல், சரத்குமார் விட்டிலிருந்தும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
 
எனவே, விஜயபாஸ்கர், சரத்குமார் மற்றும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் மூவருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவகலகத்தில் அவர்கள் மூன்று பேரும் ஆஜரானார்கள். அப்போது, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ் ஆப்பில் பிரசவம்: இது தான் தொழில்நுட்ப வளர்ச்சியோ!!