Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

Siva
செவ்வாய், 15 ஜூலை 2025 (08:04 IST)
அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சமீபத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் விஜய் கேட்ட கேள்விகள் அனைத்துமே மிகவும் சரியானவை என்றும், "24 லாக்கப் டெத் மரணத்திற்கு, 24 குடும்பங்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று விஜய் கூறியது சரியான வாதமே என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
 
மேலும், அவரது பேச்சில் எந்த இடத்திலும் வெறுப்புப் பேச்சு இல்லை என்றும், நாகரீகமான அரசியல் செய்கிறார் என்றும் மணி பாராட்டினார். "அதுமட்டுமின்றி, கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த தவறை நீங்களே சரி செய்துகொள்ளுங்கள்" என்று அவர் முதல்வருக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் பேசினார். 
 
"அவரது பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது" என்று பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் வெறுப்புப் பேச்சுடன் கூடிய விமர்சனம் செய்து வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நாகரிக அரசியல்வாதியை பார்க்கிறோம் என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments