Webdunia - Bharat's app for daily news and videos

Install App

185 தொகுதிகளில், பூத் கமிட்டி.. விஜய் மக்கள் இயக்கம் தீவிரம்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (14:27 IST)
தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்கம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பேசி ஆய்வு செய்ததாகவும், பூத் கமிட்டி விவரங்கள் வெளியிடுவதில் குளறுபடி செய்த தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமாரை நடிகர் விஜய் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
 
அதேபோல் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை பாராட்டும் விஜய், குளறுபடியில் ஈடுபடும் நிர்வாகிகளை எச்சரித்து, அறிவுரையும் வழங்குகிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
 
 இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது நடிகர் விஜய் அரசியலில் இறங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் அரசியலில் இறங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. 
 
வரும் 2024 தேர்தலிலே ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு தனக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை தெரிந்து கொண்டு 2026 ஆம் ஆண்டு முழு முயற்சியில் அரசியலில் இறங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments