Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் ஆட்டோ புக்கிங் செயலிக்கு எதிர்ப்பு! – என்ன காரணம்?

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (14:08 IST)
தமிழக அரசு உருவாக்கியுள்ள ஆட்டோ புக்கிங் செயலிக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ஓட்டுனர்களும், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் உள்ள நிலையில், சமீபமாக ஆன்லைன் ஆட்டோ புக்கிங் செயலிகளால் தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் கூறி வருகின்றனர். தனியார் ஆட்டோ புக்கிங் செயலிகளில் பல ஆட்டோ ஓட்டுனர்கள் ஒப்பந்தம் செய்து ஆட்டோ ஓட்டி வந்தாலும் அதில் கிடைக்கும் பணத்தில் செயலிகள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது.

இதனால் தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்டோ புக்கிங் செய்ய தமிழக அரசே ஒரு புது செயலியை உருவாக்க வேண்டும் என்றும், அதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வசூல் முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அதன்படி தமிழக அரசு ”TATO” என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. ஆனால் இதை தமிழக அரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளதாக இந்த செயலிக்கு ஆட்டோ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் மூலம் கொண்டு வரும் செயலியை ஏற்க முடியாது என்றும், ஆட்டோ பயணத்துக்கான செயலியை அரசே உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments